சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலும் சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்:
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஊத்துக்காடு பகுதிகளில் உள்ள 7 சொத்துக்களை தமிழக அரசு முடக்கம் செய்துள்ளது. இதற்காக சென்னை டிடிகே சாலையில் உள்ள சொத்துகள் மற்றும் வாலஸ் தோட்டத்தில் உள்ள சொத்துக்கள் உட்பட 7 சொத்துக்களும் தமிழக அரசின் சொத்துக்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கே சொந்தமானது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
புதிய கெட்டப்பில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – வெளியான புகைப்படம்!!
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் மீண்டுமாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான, திருவாரூரில் உள்ள மேலும் சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலும் சில சொத்துக்கள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.