நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வசதி படைத்தவர்களும் இந்த சலுகைகளை பெற்று வருவதாக அவ்வப்போது புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக ரேஷன் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு முறையிலும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசமாக மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்பட்டதில் பெரும்பாலனோர் இணைப்பு பணியை மேற்கொள்ளாததால் ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களே., அடுத்த அகவிலைப்படி உயர்வு தயாராகிடுச்சு.., சூப்பர் அப்டேட்!!!
இந்த அரிய வாய்ப்பை ரேஷன் கார்டுதாரர்கள் தவறவிடாமல் உடனடியாக ஆதார் இணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறவிடுபவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ரேஷனில் இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படாது எனவும் அரசு எச்சரித்துள்ளது.