ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனைகள் வேண்டாம் – இந்திய மருத்துவ கவுன்சில்

0
Rapid Test
Rapid Test

இந்தியா முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு:

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா நிலவரம் குறித்து ஐசிஎம்ஆர் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. அதில் அன்றைய நாளுக்கான பாதிப்பு விபரங்கள் குறித்து தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐசிஎம்ஆர் தரப்பில் பேசிய கங்காகேதர், இரண்டு நாட்களுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் மாநிலங்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து உள்ளது.

95% ரேபிட் கிட் சோதனை முடிவுகள் தவறு – பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான் அரசு.!

அந்த கருவிகளில் பல்வேறு மாறுபாடுகள் உள்ளதாகவும், அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிபுணர் குழுவால் சரிபார்க்கப்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த விபரங்கள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here