எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது – யுவன் Open Talk..!

0

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜாக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தமிழில் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவருடைய இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அண்ணா உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன என்றும் அதிலிருந்து நீங்கள் எப்படி மீண்டு வந்தீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த யுவன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யுவன் அவருடைய பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் தற்போது இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here