இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த ஆதார் கார்டு மூலம் பல்வேறு மோசடிகள் தடுக்கப்பட்டு வருவதால், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதே போன்று ஆதார் கார்டில் உள்ள தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி ஜூலை 14 ஆம் தேதி வரை ஆதார் கார்டை அப்டேட் செய்ய மத்திய அரசு கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், தற்போது அதை செப்டம்பர் 30 தேதி வரை நீடித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மக்கள் இதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது தான் பல்வேறு குற்றங்கள் குறையும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழக விவசாயிகளே., இனி இந்த மின் இணைப்பு தான்? அரசு வழங்கிய ஒப்புதல்!!!