கடன் பிரச்சனையால் ரொம்ப கஷ்டபடுறீங்களா?? இதோ எளிய பரிகாரம்!!

0

இன்று நம்ம பெருமளவு சோகத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் ஓன்று தான் கடன் பிரச்சனை. கடன் என்றாலே நமக்குள் ஒரு பயம் வந்துவிடுகிறது. இன்றைக்கு பல குடும்பங்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். என்னத்தான் ஒடி ஒடி உழைத்தாலும் வருமானம் போதாமல் சில சமயங்களில் அவசர சூழ்நிலைக்காக கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.இதிலிலுருந்து விடுபட சில கடவுள்கள் மற்றும் பதிகங்களை பார்க்கலாம்.

கடன் வாங்க மற்றும் கொடுக்க உகந்த நாட்கள்:

கடன் வாங்க திங்ட்கிழமை உகந்த நாட்களாக குறிப்பிடப்படுகிறது. கடன் வாங்குவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும். நம்மால் திரும்ப பணத்தை செலுத்த முடியுமா, இந்த சமயத்தில் நாம் கடன் வங்குவது சரியா இல்லையா என்று பலமுறை யோசிக்க வேண்டும்.

கடனை திரும்ப செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை சிறந்த நாட்களாக குறிப்பிடபடுகிறது. முக்கியமாக குளிகை நேரத்தில் கடன் கொடுத்தவரிடம் எனது கடன் முடிந்துவிட்டது என்று சொல்லி பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கடன் தொல்லையில் இருந்து முற்றிலுமாக விடுபடலாம் என்று கூறப்படுகிறது.

முக்கிய கடவுள்கள்:

திருவாரூரில் உள்ள “ருண விமோச்சனர்” என்றழைக்கப்படும் சிவனை திங்ட்கிழமை அன்று வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. மாலோன், மைலோன் என்றழைக்கப்படும் பெருமாள் மற்றும் முருகனை வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிடபடுகிறது. குறிப்பாக, பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதியும், முருகருக்கு திருவாவினன்குடியும் சென்று வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு நலமாக வாழலாம் என்று சொல்லப்படுகிறது.

கடன் நீக்கும் பதிகம்:

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிசெய்த பதினோறு பதிகங்கள் உள்ளன. இந்த பதிகங்களை தினமும் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடலாம். அதில் முதல் பதிகம் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது. முதல் பதிகத்தை மட்டும் தினமும் பாராயணம் செய்தாலே சிறப்பு.

“நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வணம் இடுவது சொல்லே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here