ரோட்டு கடைகளில் விற்கும் பாணி பூரியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பாணி பூரிக்கு ரசிகர்கள் பட்டாளமே தனி. அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். மேலும் இந்த லாக்டவுனில் இருந்து பாணி கிடைப்பது அரிதாகி உள்ளது. இப்பொழுது பாணி பூரி வகையில் தஹி பூரி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளித்தண்ணீர் – 1 கப்
பேரிச்சம்பழம்
நாட்டு சர்க்கரை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
புதினா
கொத்தமல்லி
பச்சைமிளகாய் – 2
எலுமிச்சைப்பழம்
உருளைக்கிழங்கு – 2
தயிர்
செய்முறை
முதலில் புளித்தண்ணீர், பேரிச்சை பழம், நாட்டு சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இப்பொழுது அதனை அரைத்து எடுத்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்வோம். பின் ஒரு கையளவு புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி சிறிது, எலுமிச்சை சாறு, போன்றவற்றை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பிறகு 2 உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பிறகு ஒரு கப் தயிரை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இப்பொழுது சிறு சிறு பூரிகளை எடுத்துக்கொள்ளவும்(கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்). இதனை தட்டில் வைத்து ஓட்டை போட்டு அதில் முதலில் உருளைக்கிழங்கு கலவையை வைக்கவும் அதன்பிறகு புலி கரைசலை 1 அரை தேக்கரண்டி ஊற்றவும் அதன்பின் புதினா கலவையை ஊற்றவும்.அதன் மேலே தயிரை ஊற்றவும். இப்பொழுது சூப்பரான தாஹி பூரி தயார்.