தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கப், குடைமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது, பட்டை, பெருஞ்சீரகம், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பின்பு குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.அதன் பின் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும். பிறகு அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன் பின் இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். இப்பொழுது குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |