இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கால தேவைக்காக பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை தேடி வருகின்றனர். அதன் படி அஞ்சல் துறையில் பெண்களுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண்களுக்காக பொன்மகன் திட்டமும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கி விட்டு, பணம் எதுவும் செலுத்தாமல், எடுக்காமல் இருந்தால் அந்த கணக்கு செல்லாததாக கருதப்படும்.
இந்நிலையில் அந்த கணக்கை மீண்டும் எப்படி புதுப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது தற்போது உள்ள KYC ஆவணங்கள், பாஸ்புக் போன்றவற்றை கணக்கு தொடங்கிய தபால் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் மீண்டும் கணக்கை புதுப்பிக்க முடியும். எனவே அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கி பயன்படுத்தாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம்.