நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு OBC பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த உ.பி. அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, “அரசியலமைப்புச் சட்டம் 246 பிரிவின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மத்திய அரசிடம் உள்ளது. இதில் மாநில அரசுக்கு உரிமை கிடையாது. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.” என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ஹிட் மேன்…, வெளியான நியூ அப்டேட்.!