மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் குறிப்பாக மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றுதான் 300 யூனிட் இலவச மின்சார திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மக்கள் வீடுகளில் சோலார் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து, பார்க்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சொந்த சொந்த வசிப்பிடம் கொண்டிருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்களை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.