நாடு முழுவதும் ரயில் பயணம் மேற்கொள்ளும் சாமானிய மக்களுக்கும், நவீன வசதியுடன் கூடிய விரைவு பயணங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்கள், ஜெனரல் கோச்கள் அடங்கிய அம்ரித் பாரத் ரயில் சேவையை அண்மையில் அறிமுகம் செய்துள்ளனர். தற்போது பீகார் to அயோத்தி மற்றும் மேற்கு வங்கம் என இரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.., என்னென்ன தேவை?? முழு விவரம் இதோ!!!
இதில் வந்தே பாரத் ரயிலை போல இருக்கை, பயோ கழிவறை உள்ளிட்டவை நவீன முறையில் இருப்பதோடு விரைவான பயணங்களும் வழங்கப்படுகிறது. அதேபோல் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் பயன்பெறும் வகையில், சாதாரண ரயில் டிக்கெட் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதால், வரும் 2024-25ஆம் நிதியாண்டில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சாமானிய மக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.