இந்திய அரசானது, பெண்கள் மற்றும் முதியவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த வகையில், நிதி பாதுகாப்பிற்காக சேமிப்புத் திட்டத்தை அஞ்சலகத் துறையின் மூலம் வங்கிகளில் மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் (MSSC) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிதி சேர்க்கையை ஊக்குவிப்பதற்கான சிறு சேமிப்புத் திட்டமாகும்.
- MSSC மற்றும் SCSS திட்டங்களுக்கு கணக்குகளை ஆன்லைனில் திறப்பது குறித்து பின்வருமாறு காணலாம்.
- அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவர்களின் DOP இணைய வங்கிக்குள் நுழைந்து, முகப்பு பக்கத்தில் உள்ள ‘General Services’ ஆப்சனை க்ளிக் செய்யவும்.
- ‘Service Requests’ கிளிக் செய்து, ‘New Requests’-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
- இதன் பின் உங்களுக்கு வேண்டிய திட்டத்தை SCSS Accounts – Open a SCSS Account’ அல்லது MSSC Accounts – Open a MSSC Account தேர்வு செய்து post office-உடன் இணைந்து உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யவும்.
- இதன் கீழ் agree to all the terms and conditions என டிக் செய்து, அதன் பின் வரும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- இறுதியாக பணப் பரிவர்த்தனைகளை செக் செய்து கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பதிவு செய்து submit – ஐ கிளிக் செய்தவுடன் உங்களது சேமிப்பு கணக்கு ஆன்லைன் மூலம் திறக்கப்பட்டு விடும்.