தற்போதைய காலகட்டத்தில் சின்ன சின்ன விஷயத்திற்காக இளைஞர்கள் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கடனுக்கு பிரியாணி கொடுக்காததால் ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் கடலூர் நெய்வேலி நகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கண்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில், இவரது கடைக்கு காப்பான் குளம் கிராமத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேரும் கடனாக பிரியாணி வாங்கி அதற்கான பணத்தை தற்போது வரை கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இன்று மீண்டும் அந்த இருவரும் பிரியாணியை கடனாக கேட்டு தகராறு செய்துள்ளனர். இதையடுத்து எழில் தான் கொண்டு வந்த கத்தியால் கண்ணனை குத்தியுள்ளார். அப்போது அங்கு இருந்த கண்ணன் தரப்பினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கண்ணன் உட்பட விக்கி, எழிலுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
2 மணி நேரத்தில் லதாவை கரெக்ட் செய்த ரஜினி.., வெளியான கியூட் லவ் ஸ்டோரி!!