சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை, தேசிய சுகாதார இயக்ககம் நிர்ணயித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ், லைக்ரா உள்ளிட்டவை இல்லாமல் கேஷுவல் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து தான் மருத்துவமனை வளாகத்திற்குள் வர வேண்டும். அதேபோல் பெண் பணியாளர்கள் ஜீன்ஸ், டீ-ஷர்ட், ஸ்கர்ட், டாப் அணிந்து மருத்துவமனைக்கு வரக்கூடாது. மாறாக சேலை அல்லது துப்பட்டாவுடன் சல்வார் கமீஸ் மட்டுமே அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரையில் ரயில் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!