உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்த பயணிகளின் தனியார் ரயில் பெட்டி, இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் கேஸ் சிலிண்டரை பற்ற வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தால் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவருக்கும் தலா ரூ,3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அமைச்சர் மூர்த்தியிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
18 வருடம் வாய் பேசாமல் இருந்த பெண்.., பேச வைத்து அசத்திய AI டெக்னாலஜி.., அப்படி என்ன நடந்தது!!!!