தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க இந்திய பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ராமேஸ்வரத்திற்கும் செல்ல உள்ளார்.
இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மோடி வருகையை முன்னிட்டு குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பாதுகாப்பு போலீசார் தங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மதுரை வாசிகளே.., ஜன.25ல் இதை மட்டும் செய்யாதீங்க.., மாநகராட்சி பகீர் அறிவிப்பு!!!