தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ஐந்து நாட்கள் விடுமுறை முடிவடைந்து மாணவர்கள் பலரும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இருந்தாலும் நாளை (ஜன.20) சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) என இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என பல்வேறு மாவட்ட பள்ளி மாணவர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த சூழலில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை (ஜன.20) வழக்கம்போல் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் வழங்கப்பட்ட விடுமுறை தினங்களை ஈடு செய்யவே நாளை பள்ளிகள் செயல்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பள்ளி மாணவர்களே.., நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., அறிவிப்பு வெளியீடு!!!