இனி மருந்து சீட்டை இப்படி தான் எழுத வேண்டும்.., டாக்டர்களுக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு!!!

0
நாடு முழுவதும் இப்போது மருந்தகங்களில் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வலி நிவாரணிகளை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். தற்போது இதை தொடர்ந்து மத்திய அரசு டாக்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதாவது மருத்துவர்களின் பரிந்துரையோடு பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால் மனிதனுக்கு சில நோய்கள் ஏற்படுகிறது.
இதனால் இனி வரும் நாட்களில் டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது குறித்தும் மருந்து சீட்டில் எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் மருந்தகங்களில் மருந்து சீட்டு இன்றி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here