விஜய் டிவியில் அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 7 நிகழ்ச்சிக்கு கடந்த (ஜனவரி 14) அன்று கிராண்ட் பினாலே நடைபெற்றது. இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா இதன் டைட்டிலை வென்று அசத்தினார். எனவே பிக் பாஸ் தமிழ் வரலாற்றில், ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் கோப்பையை வென்றது இதுவே முதல் முறையாகும். கோப்பையை வென்றது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் அர்ச்சனா.
இந்நிலையில் இவர் குறித்து தனது அதிகாரப்பூர்வ x பக்கத்தில் பூர்ணிமா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் என்றும், உங்களுடன் வீட்டுக்குள் செலவழித்த நேரம் மிகவும் பிடித்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு விஜய்யை ஏன்டா டேய் என்றும் கூறியுள்ளார். மாயாவை குறித்து நீ எனது போராளி, எனது உண்மையான வெற்றியாளர் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். இவரின் பதிவுக்கு ஆதரவு கிடைத்தாலும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.