நடப்பு ஆண்டு மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் தேர்வு மையங்களுக்கான பல்வேறு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செய்முறை தேர்வு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் பொதுத்தேர்வு எழுத உள்ள மேல்நிலை (11, 12) வகுப்புக்கான செய்முறை தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்முறை தேர்வுகளை வினாக்கள் மூலம் விடையளிக்கும் விதமாக தேர்வுக்கு குழு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் வருவதில் மீண்டும் தடை., மத்திய அரசின் அறிவிப்பால் ஊழியர்கள் ஷாக்!!
இதனால் உடல் இயக்கம், செவித்திறன், பார்வை திறன் போன்ற குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆய்வக உதவியாளரை நியமிக்க வேண்டும். மேலும் இந்த மதிப்பெண்களை மார்ச் 11ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.