இந்த 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0
தமிழகத்தில் இன்று நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட தகவலின்படி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேலும் நாளை நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழக தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மேலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here