நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 23) தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
குறிப்பாக தமிழகத்தில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை, சேலம், திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள், ஆப்பிளுக்கு இணையாக களமிறங்கும் Phonepe., ஆப் டெவலப்பர்கள் வரவேற்பு!!