ஹரியானா மாநிலத்தில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாநில அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.
நேர மாற்றம்:
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பின், பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன. பல மாநிலங்களில் கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது, அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு முன், பள்ளிகள் 5 மணி நேரம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நேர மாற்றம் பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, இந்த புதிய நேர மாற்றத்தை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்