டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2a தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
குரூப் 4 முறைகேட்டிற்கு காரணமான அதே ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் 37 பேர் தேர்வு பட்டியலில் இருந்து வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர்கள் அரசுப் பணியில் இருப்பதால் அவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |