தமிழர்களின் கலாச்சார போட்டியை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு பெற்றது. இதனால் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்படி முக்கிய தலைவர்கள் முன்னிலையில் ஜனவரி 15ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் சிறப்பாக விளையாடி 9 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்தார். ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக வாடிவாசல் விட்டு வெளிவந்த காளை கொம்பால் அரவிந்த்ராஜ் வயிற்றில் முட்டி தூக்கியது.
இதையடுத்து படுகாயமடைந்த அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.