அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.
அது தொடர்பான விவரம் பின்வருமாறு:
- தமிழ்நாடு, குஜராத், அசாம், ஒடிசா ஆகிய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) 3.75% உயர்த்தப்பட்டுள்ளது.
- கேரளாவில் 2024 ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு 2% அகவிலைப்படியை உயர்த்தி உள்ளனர்.
- மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2024 மார்ச் முதல் DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் அதிகரிக்கும் சுங்கச்சாவடி.., மத்திய அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!!!