நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சாலைகளை பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 48 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதைத்தொடர்ந்து மத்திய அரசு இன்னும் சுங்கச்சாவடிகளை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பெங்களூர்-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை வழித்தடத்தில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரியில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.