நாடு முழுவதும் செல்போன் பயனாளர்கள் பலரும் 5ஜி நெட்வொர்க்-க்கு மாறி வரும் நிலையில், பெரும் அதிர்ச்சி தகவலை ஆண்டிக் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15 முதல் 17 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
PF சந்தாதாரர்களே., இந்த வயதில் பென்ஷன் எடுத்தால், அதிக பணப்பலன்? EPFOவின் விதிமுறை!!!
குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை கட்டணத்தில் கூடுதலாக ரூ.14 வரையிலும், மற்ற ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதலாக 17 சதவீதம் வரை கட்டண உயர்வை விதிக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி 84 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் ரூ.600 லிருந்து ரூ.702 ஆக உயரக்கூடும். இதேபோல் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களும் கடுமையான கட்டண உயர்வை அறிவிக்கும் என ஆய்வில் கணித்துள்ளனர்.