நாடு முழுவதும் மாதாந்திர ஊதியம் பெறுபவர்களின் ஓய்வு கால நலன் கருதி, ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை EPFOவின் PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அப்படி 10 ஆண்டுகள் EPFO க்கு பங்களித்து வரும் பட்சத்தில், அந்த ஊழியர் ஓய்வூதியம் பெற தகுதியானவராக கருதப்படுகிறார். அதன்படி குறைந்தபட்சம் 10 வருட பங்களிப்புடன் 58 வயதை பூர்த்தி செய்த பின், அந்த ஊழியருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத்தை EPFO வழங்கி வருகிறது.
அதேபோல் 58 வயதிற்கு பதிலாக 60 வயதிலிருந்து ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அவர் அதிக ஓய்வூதியத்தைப் பெறுகிறார். அதாவது சாதாரண ஓய்வூதியத் தொகையை விட 8 சதவீதம் கூடுதல் ஓய்வூதிய பண பலன்களை பெறலாம் என குறிப்பிட்டுள்ளனர்.