தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளின் இரு தினங்களுக்கு முன்னதாகவே, மது விற்பனைக்கு தடை விதித்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் மதுக் கடைகள், பார்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது மதுபிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., வருகிறது புதிய மாற்றம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!