நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆளும் கட்சி தலைவர்கள் கொடுத்த வாக்குறுதி குறித்த பல்வேறு கேள்விகள், மக்களிடம் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் சத்தீஸ்கரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என பாஜக அறிவித்து இருந்தது.
அதன்படி சத்தீஸ்கர் முதல்வராக பொறுப்பேற்ற விஷ்ணு தேவ் சாய் அவர்கள், தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் எனும் பாஜக வாக்குறுதி எப்போது? அமலுக்கு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மாநிலம் முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, மலிவான விலையில் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் என பதிலளித்துள்ளார்.