நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க, சாலைகளில் அனைத்து வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
தமிழக சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு., ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கட்டுப்பாடுகள் தொடரும். அதுவரையிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.