தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பரிசுப்பொருள், உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட மளிகை பொருட்களை வாங்காமல் விடுவதால், அது தேங்கி அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது..
இதனை ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுவதாக புகார் எழுந்ததால், ரேஷன் பொருட்களை தேங்க விடாமல் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தாலும், கடையில் பொருள் இல்லை என கார்டுதாரர்களை திருப்பி அனுப்பும் நிலை ஓயவில்லை.
வாட்ஸ் அப்-க்கு புதிய கட்டுப்பாடு அமல்.. வயது வரம்பு குறைப்பு.. அரசு அதிரடி நடவடிக்கை!!
இந்த முறைகேட்டை தடுப்பதற்காகவே, TNPDS எனும் மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் ரேஷன் உறுப்பினர்களுக்கான உணவுப் பொருள் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை, துல்லியமாக அறியலாம் என தெரிவித்துள்ளனர்.