நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு தொடர்பாக உத்திரப்பிரதேஷ் மாநில அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது உத்திரப்பிரதேசத்தில் புதிய ரேஷன் கார்டு பெற வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின்னர் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.