கேன்சரை குணப்படுத்த தடுப்பூசி.., கோவிட் வாக்ஸ் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு!!

0
கேன்சரை குணப்படுத்த தடுப்பூசி.., கோவிட் வாக்ஸ் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு!!
கேன்சரை குணப்படுத்த தடுப்பூசி.., கோவிட் வாக்ஸ் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு!!

புற்றுநோய்க்கு எதிராக, விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட உள்ளதாக பயோ என் டெக் நிறுவனம் நம்பிக்கை கொடுத்துள்ளது. இது குறித்து இந்நிறுவனம் பைசர் உடன் இணைந்து பணியாற்றிய வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோய்:

உலக அளவில் அதிக மக்களை பாதிக்கும் நோயாக புற்றுநோய் உள்ளது. எவ்வளவு தான் தொழில்நுட்பங்கள் வளர்த்தாலும் இன்னும் குணப்படுத்த முடியாத நோயாக புற்றுநோய் உள்ளது. இது குறித்து பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது, இருப்பினும் புற்றுநோயை முழுமையாக ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலை தான் நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் தான், ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக்’ நிறுவனம், வரும் 2030ம் ஆண்டில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்க, யூஸ் செய்யப்பட்ட அதே mRNA தொழில்நுட்பத்தை கொண்டு தான் புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுத்தை போல் ஓடும் ஜடேஜா.., ட்விட்டரில் வெளியிட்ட மாஸ் வீடியோ..!! – மேட்சில் கம்பேக் எப்போ..??

மேலும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான, உகுர் சாஹின் மற்றும் ஓஸ்லெம் துரேசி கூறியது, “புற்றுநோய்க்கான சிகிச்சை அல்லது புற்றுநோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவது எங்கள் பிடியில் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்” என்று நம்பிக்கை கொடுத்துள்ளனர். மேலும் இந்த மருந்து, குடல் புற்றுநோய், மெலனோமா மற்றும் வேறு சில புற்றுநோய்களுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து பயோ என் டெக் நிறுவனம், புற்றுநோய் சார்ந்த மருந்துகளுக்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here