லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கட்சித் தலைவர்கள் வீடு வீடாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்திலும் முதலமைச்சர் ரங்கசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
அப்போது மக்களிடம் தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குப் பிறகு புதுச்சேரியில் முதியோருக்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு விசாரணை., ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!