மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பரிசீலனையின் போது, “மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் முதல்வரின் கைது அரசியலமைப்பு அடிப்படை கோட்பாட்டுக்கு எதிரானது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை நியாயம் அற்றது.” என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக “டெல்லி முதல்வர் கைதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை. தேர்தலை காரணம் காட்டி எவரும் தப்பிக்க முடியாது.” என அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.