தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இன்றும் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்ட காரணத்தால் தங்கம், வெள்ளி என ஆபரணங்கள் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் தங்கத்தின் தேவை அதிகரித்து உள்ள காரணத்தால் வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்கும் என வணிகர்கள் கூறுகின்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து..? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12 ரூபாய் அதிகரித்து ரூ. 4,538 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 காரட்) 96 ரூபாய் உயர்ந்து ரூ. 36,304 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ரூ. 53.10 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 53,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.