கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்ந்து உள்ளது. மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன காரணம்..?
கொரோனா வைரஸ் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்வதால் விலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் 33 ஆயிரம்..!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 22 கேரட்டின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 4,153 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் ரூ. 1,024 உயர்ந்து 33,224 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளதால் மக்கள் கவலையில் உள்ளனர்.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ. 1.60 காசுகள் உயர்ந்து 50.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |