கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக பண்டிகை காலங்களிலும் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாளாக மீண்டுமாக அதிகரித்து வந்தது.
குறைந்த விலை
தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்த நிலையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மீண்டுமாக கடந்த மூன்று நாளாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்திருந்தது. விலை குறைந்த போது வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிவந்தனர். ஆனால் மீண்டும் விலை அதிகரித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இரு சக்கர வாகன உற்பத்தி – ஹீரோ மோட்டோகார்ப் புதிய மைல்கல்!!
இரண்டு நாட்களுக்கு பின்பு தங்கம் விலை தற்போது மீண்டுமாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணதங்கத்தின் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது. வெள்ளி ரூ.72.50 க்கு விற்கப்பட்டது.
தற்போது மீண்டுமாக 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.37,312 க்கு விற்கப்படுகிறது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,664 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையும் நேற்றைய விலையை விட ஒரு ரூபாய் வரை குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.