தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலை ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று தீடிரென அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்று ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து உள்ளது.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்த பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தங்க விலையேற்றம். கடந்த மாதம் வரலாறு காணாத அளவு சவரன் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதற்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே காரணம் ஆகும். கொரோனா பரவலால் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி விழுந்ததால், பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகள் மீது கவனம் அதிகரித்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் – தமிழக அரசு அதிரடி!!
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை 11 ரூபாய் உயர்ந்து ரூ. 4,886-க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் அதிகரித்து 39,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 1.90 ரூபாய் குறைந்து 68.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ. 1,900 குறைந்து ரூ. 68,500-க்கும் விற்பனை ஆகிறது.