இனி தங்கம் வாங்குவது கனவு தான் போல – சவரன் 41 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. இதனால் தங்க நகைகள் வாங்குவது மக்களின் கனவாக மட்டுமே இருக்கும் போல என புலம்பி வருகின்றனர்.

இன்றைய விலை:

இந்தியாவில் சுப நிகழ்ச்சிகள் என்றாலே முதலில் வாங்கப்படுவது தங்க நகைகள் தான். ஆம் அந்த அளவிற்கு இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியம். உலகத்தில் உள்ள பிற நாடுகளில் தங்கம் ஒரு முதலீடு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமே ஆபரணப் பொருளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல நாள் என்றாலும், தங்க நகைகள் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியர்களால் அந்த அளவிற்கு விரும்பப்படும் தங்கத்தின் விலை கொரோனாவால் வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே காரணம் ஆகும். கொரோனாவால் பிற தொழில்கள் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீதே உள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரசீது இல்லாவிட்டால் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி – மத்திய அரசு பரிசீலனை!!

Gold Purchase
Gold Purchase

இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 28 ரூபாய் அதிகரித்து ரூ. 5,178 க்கும், ஒரு சவரன் ரூ.224 உயர்ந்து 41,424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.72.50 க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here