தமிழகத்தில் தங்கம், வெள்ளியின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதனால் விலை ஏறுவதும், பின்பு சில நாட்கள் தொடர்ந்து குறைவதும் என பொதுமக்களை குழப்பி வருகிறது. தற்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் அதன் தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்:
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் பல தொழில்துறைகள் முழு வேகத்தில் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கின் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனால் கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சரிவை சந்தித்தன. எனவே பாதுகாப்பான முதலீடுகளான தங்கம் போன்ற ஆபரணங்களின் பக்கம் முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் தங்கத்தின் மீது முதலீடுகள் கிடுகிடுவென அதிகரித்த காரணத்தால் அதன் விலையும் பன்மடங்கு உயர்ந்தது. கடந்த மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் அதன் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.9 உயர்ந்து 4,888 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72 ரூபாய் அதிகரித்து ரூ.39,014க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 69.30 ஆகவும், ஒரு கிலோ 69,300 ரூபாயாகவும் உள்ளது.