கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுத்த கோவா – அரசு மற்றும் டாக்டர்களின் சாதனை.!

0

அனைத்து நாடெங்கிலும் கொரோனா கோரா தாண்டவம் ஆடி வரும் நிலையில் கோவா கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது. கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாக குணமைந்துள்ளனர். எனவே, கோவா கொரோனா இல்லாத மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவில் கொரோனா

இந்தியா முழுவதும் புதிதாக 1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712 -ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 507-ஆக அதிகரித்துள்ளது.

Coronavirus Death Toll: चीन में 24 घंटे के अंदर 45 ...

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளில் 2,231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 3,86,791 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவா

இதை தொடர்ந்து கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது ஆளுக்கு மீண்டும் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

கொரோனா இல்லாத மாநிலமாகக் கோவாவை ஆக்குவதற்குத் தம்முயிரையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த், நலவாழ்வுத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே ஆகியோர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here