உத்தர பிரதேசத்தில் மணக்கோலத்தில் உள்ள காதலியை பார்க்க மணப்பெண் வேடமிட்டு காதலன் சென்றுள்ளார். ஆனால் அவரது ஆசை நிராசையாக போனது. பெண் வேடமிட்ட அந்த காதலன் வசமாக பெண்ணின் உறவினர்களிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
காதல் என்பது பூமி தோன்றிய காலத்தில் இருந்து மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள்,விலங்குகள் என அனைத்திலும் இருக்கும் ஒரு அற்புத உணர்வு. சிலருக்கு அது வெற்றியை கொடுக்கும் சிலர் தோல்வியை தழுவுவர் இருப்பினும் அந்த காதலுக்காக எந்த எல்லைக்கும் துணிந்து செல்வார்கள்.இத்தகைய செயல்களை நாம் படங்களிலும் நிகழுலகிலும் பார்த்துள்ளோம் ஆனால் உ.பி யில் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் காதலிக்காக காதலன் காதலியின் திருமணத்திற்கு சென்ற நிகழ்வு நடந்துள்ளது.
அந்த காதலனும் மணப்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.ஆனால் அவர்கள் காதல் கைகூடவில்லை. இதையடுத்து அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த காதலன் அந்த பெண்ணை சந்திக்க விரும்பவே சரத்குமார் பட பாணியில் தன் காதலியின் திருமணத்திற்கு மணப்பெண் வேடத்தில் சென்றுள்ளார்.
இவரை பார்த்ததும் சிலருக்கு சந்தேகம் எழவே அவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.அப்பொழுது அவர் தலையில் ஷால் போட்டு மூடியிருந்ததை அகற்றும் போது அவருடைய தலையில் உள்ள விக் தனியாக வந்துள்ளது.இதையடுத்து அவரை அடித்து விசாரித்த போது மணப்பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக திருமண மண்டபத்திற்கு வந்து தெரியவந்தது.
அதன் பின் போலீசார் விசாரணையில் அந்த பெண் அவருடன் வருவதாக இருந்ததால் அவர்களை அழைத்து செல்ல திருமண மண்டபத்தின் வாசலில் அவரது நண்பர்கள் இருவர் காத்திருந்ததும் தெரியவந்தது. இவ்வாறு இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சுமளவுக்கு நடந்தேறியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!