கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒடிசா சி.எச்.எஸ்.இ வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும் “எந்தவொரு தேர்வையும் விட மாணவர்களின் வாழ்க்கை மிக முக்கியமானது” என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே அசாம் மற்றும் தமிழ் நாடு மாநில அரசு சிபிஎஸ்இ அறிவித்த பின்னர் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. நிலவும் இந்த கொரோனா சூழலில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார் அறிவித்தார்.
அதேபோல் கர்நாடக அரசு பி.யூ.சி இரண்டாம் ஆண்டு தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. கொரோனா எதிரொலியால் சிபிஎஸ்இ வாரியம் தேர்வுகளை ரத்து செய்ததை தொடர்ந்து ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களும் தங்கள் வாரியத் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டன.இந்த மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஒடிசா மாநில அரசும் பிளஸ் 2 பொது தேர்வுகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!