கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைக்க பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு ஜூன் 5 முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது கடுமையான தடைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான ஊரடங்கு:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட நிலையிலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதம் குறையாத காரணத்தால் மேலும் ஜூன் 5 முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது கேரளா அரசு.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த கூடுதல் கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள், தொழில்துறை நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் (பேக்கேஜிங் உட்பட) மற்றும் கட்டுமானப் பொருட்களை விற்கும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும். இது தவிர அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் கமிஷன்கள் ஜூன் 10 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.