பிசிசிஐயின் தலைவரான கங்குலிக்கு 3 தினங்களுக்கு முன்பாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் இவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கங்குலி:
தற்போதைய பிசிசிஐயின் தலைவரும் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்பவர் தான் கங்குலி. இவரை இவரது ரசிகர்கள் பாசமாக தாதா என்று அழைத்து வருவார்கள். இவர் தலைமையில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் நடந்த ஐபிஎல் தொடர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவருக்கு கடந்த 2ம் தேதி அன்று யாரும் எதிர்பாராத வகையில் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கங்குலி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பரிசோதனையில் அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளது தெரியவந்தது. பின்பு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதயத்தில் 1 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அவர் நலமாகி வீடு திரும்பினார். தற்போது மீண்டும் 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சி வலி ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிக்பாஸ் பாலா,யாஷிகா இடையே காதலா?? யாஷிகாவின் அம்மா ஓபன் டாக்!!
கங்குலிக்கு தற்போது 2 வது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை இதயத்தில் 2 ஸ்டென்டை பொருத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் கங்குலி.