இன்று மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதனை முன்னிட்டு கலிபோர்னியாவில் உள்ள காந்தி சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அங்கு வாழும் இந்தியர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி:
நமது நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது அவரது மறைவு தினமான இன்று தியாகிகள் தினம் என்று போற்றப்பட்டு வருகிறது. இவர் தனது அஹிம்சை முறையால் இந்தியாவிற்கு அந்நியர்களிடம் விடுதலை பெற்று தந்தார். மேலும் இவரது அஹிம்சை முறை உலக நாடுகள் அனைவராலும் கவரப்பட்டது. இதற்கு சான்றாக ஒன்று சொல்லலாம். இவரது உருவ சில கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குக் வித் கோமாளி செட்டில் கேக் கட் செய்து கொண்டாடிய அஸ்வின் – வைரலாகும் வீடியோ!!
அந்த அளவிற்கு காந்தியின் புகழ் உலக மக்களுக்கு பரவியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது இவரது நினைவு தினமான இன்று ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் கலிபோர்னியாவில் இடம் பெற்றிருக்கும் காந்தியின் உருவ சிலை மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காந்தியின் நினைவு தினத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளதால் அங்கு வாழும் இந்தியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்து கலிபோர்னியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.